சனி, 9 ஏப்ரல், 2011

நகை‌ச்சுவைக‌ள்

கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!
ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?


டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?


என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?


மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?



கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும் !


படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?


குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!


டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.