சனி, 14 ஏப்ரல், 2012

முக்கிய இணையதளங்கள்


பொருளியல் மேம்பாட்டு நிறுவனங்கள்
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்ககம்.

படிவங்கள்



1
2
3

சாதி சான்றிதழ்



தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
  1. சாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. பிறப்பிடச் சான்றிதழ்
  4. இருப்பிடச் சான்றிதழ்
  5. வேளாண் சேவை இணைப்பு படிவம்
  6. விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
  7. புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
  8. பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
  9. பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
  10. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்  உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
  11. பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல்   புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
  12. தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
  13. சமூக நலம்

சொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு

சொட்டுநீர் பாசன முறையை கையாண்ட முருங்கை தோட்டத்தில் மகசூல் மும்மடங்கு பெருகியுள்ளது.
கடந்த ஓராண்டிற்கு முன்பு வரை வாடிப்பட்டி பகுதியில் பயிரிடப் பட்டுள்ள முருங்கை மரங்கள் இயல்பான முறையில் நீர் பாய்ச்சி, உரமிட்டு,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட 120 மரங்களில் மரம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 10கிலோ மகசூல் கிடைத்தது. மகசூல் குறைந்ததற்கு காரணம் பாசனநீர் மற்றும் உரம் ஆகியவை பெருமளவு வீண் ஆனதே காரணம்.
தற்போது சொட்டுநீர் பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் மகசூல் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் மரங்களுக்கு தேவையான நேரத்தில், தேவைக்கேற்ப நீர் மற்றும் உரம் ஆகியவை கிடைப்பதால் மரம் ஒன்றுக்கு சராசரியாக 30 கிலோ மகசூல் கிடைக்கிறது.அதனால் விவசாயி கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாகிறது.
மேலும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே மகசூல் பெற்று வந்த விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயத்தை மேற்கொள்ளும் போது ஆண்டுக்கு மூன்று முறை மகசூல் பெறவும் வாய்ப்புள்ளது. இதை அமைக்க அரசு மானியம் வழங்குகிறது.
நன்றி: erodelive

வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு அழகர்சாமி என்பவர் வருடம் முழுவதும் காய்க்கும், வறட்சியை தாங்கும் முருங்கை செடி ஒன்றை கண்டு பிடுத்து இருக்கிறார். இந்த மரம் முளைத்து 5 மாதம் ஆன பின்பு காய்க்க ஆரம்பித்தும் அதன் பின்பு வருடம் முழுவதும் காய்கிரதாம்.
திரு அழகர்சாமி அவர்களை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
6/39 தெற்கு தெரு, பள்ளபட்டி, நிலகோட்டை தாலுகா, திண்டுக்கல் மாவட்டம தமிழ் நாடு.
மொபைல்:
09865345911 மற்றும் 09791774887
நன்றி: ஹிந்து நாளிதழ் (ஆங்கிலம்)

செடி முருங்கை பயிர் இடுவது எப்படி?

இரகங்கள் : பிகேஎம் 1. கேஎம் 1, பிகேஎம் 2


மண் மற்றும் தட்பவெப்பநிலை :
  • செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும்.
  • இருப்பினும் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது, மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.
பருவம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர்
விதையளவு : எக்டருக்கு 500 கிராம் விதைகள்
நிலம் தயாரித்தல்
  • நிலத்தை நன்கு உழுது சமன் செய்த பின்பு 2.5 மீ  x 2.5 மீ இடைவெளியில் 45  x 45 x 45 செ.மீ நீளம். அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
  • தோண்டிய குழிகளை ஒரு வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ வாரம் ஆறப்போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 கிலோ மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்பவேண்டும்.
  • குழிகளைச் சுற்றி சுமார் 60 செ.மீ அகலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கேற்ற வாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.
விதையும் விதைப்பும்
  • மூடப்பட்ட குழிகளின் மத்தியில் சுமார் 3 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்கவேண்டும்.
  • ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்கவேண்டும்.
  • விதைத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைக்கும்.
  • விதைகளை பாலித்தீன் பைகளில் விதைத்து 30 நாட்கள் வயதுடைய செடிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம்.
  • விதைகள் முளைக்காத குழிகளில் பாலித்தீன் பைகளில் வளர்ந்த செடிகளை நட்டு செடி எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்.
நீர் நிர்வாகம்
விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்றவேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
  • முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து 16 கிராம் மணிச்சத்து, 30 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.
  • மேலும் ஆறாவது மாதத்தில் தழைச்சத்து மட்டும் ஒரு செடிக்கு 45 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
களையெடுத்தல் :
  • விதைத்து இரண்டு மாதங்கள் வரை நிலத்தை களையின்றி பராமரிக்கவேண்டும்.
  • செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒரு முறை அல்லது தேவைப்படும் போது களையெடுக்கவேண்டும்.
நுனிகிள்ளுதல் :
  • செடிகள் சுமார் 1 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியைக் கிள்ளிவடவேண்டும்.
  • இவ்வாறு செய்வதனால் பக்கக் கிளைகள் அதிகமாகத் தோன்றும்.
ஊடுபயிர்:
  • தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் பொழுது ஊடுபயிராக தக்காளி, வெண்டை, தட்டைப்பயிறு போன்ற குறுகிய காலப் பயிர்களைப் பயிர் செய்யலாம்.
  • பழத்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகளில் முருங்கையை ஊடுபயிராகப் பயிரிடும் பொழுது மரங்களின் இடைவெளியை அனுசரித்து குழிகள் எடுத்து வைக்கவேண்டும்.
மறுதாம்புப் பயிர் :
  • ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு செடிகளை தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டிவிடவேண்டும்.
  • இதனால் புதிய குருத்துக்கள் வளர்ந்து மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும்.
  • இதுபோல ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புப் பயிராக பராமரிக்கலாம்.
  • ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பழஈக்கள் :
  • பழு ஈக்களின் குஞ்சுகள் காயைத் தின்று சேதப்படுத்துதல், இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
  • பென்தியான்ஈ டைக்குளோர்வாஸ், மானோகுரோட்டோபாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மிலி என்ற விகிதத்தல் கலந்து தெளிக்கவேண்டும்.
  • மருந்து தெளிப்பதற்கு முன் காய்களைப் பறித்துவிடவேண்டும். மருந்த தெளித்தபின் 10 நாட்களுக்கு அறுவடை செய்யக்கூடாது.
பூ மொட்டுத் துளைப்பான் :
  • பூக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் டைக்குளோர்வாஸ் அல்லது எண்டோசல்பான் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
கம்பளிப்பூச்சிகள் :
  • இப்பூச்சிகள் இலைகளைத் தின்று சேதம் விளைவிக்கும்.
  • வளர்ச்சி பெற்ற  கம்பளிப் புழுக்களை மருந்து தெளித்து அழிப்பது மிகவும் கடினம்.
  • எனவே வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த நெருப்புப் பந்தங்களைக் கொண்டு புழுக்களின் மேல் தேய்க்கவெண்டும்.
நோய்கள்
தூர் அழுகல் நோய் :
  • இது பிஞ்சுக் காய்களின் தோல் பகுதியில் உண்டாகும் காயங்கள் மூலம் பூசணம் நுழைந்து அழுகலை உண்டாக்குகிறது.
  • காய்களின் வெளிப்பரப்பில்  பழுப்புநிறப் புள்ளிகள் முதலில் தோன்றும். பின்பு அதிக அளவில் கறுப்புப் புள்ளிகளாக மாறிவிடும்.
  • நோய் முற்றிய றிலையில் பிசின் போன்ற திரவம் வடியும்.
  • இந்நோய் பழ ஈயின் பாதிப்புடன் சேர்ந்து காணப்பட்டால் பெருஞ்சேதம் உண்டாக்கும்.
  • இதனைக் கட்டுப்படுத்த பிஞ்சுப் பருவத்தில் கார்பன்டாசிம் ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் அல்லது மேன்கோசெப் ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
  • காய்கள் வளர்ச்சியடையும் போது மறுபடியும் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
அறுவடை
விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும்.
மகசூல் : ஓர் ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம். ஆண்டொன்றிக்கு ஒரு எக்டருக்கு 50-55 டன் வரை காய்கள் கிடைக்கும்.
நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்

முருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி?

செடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாக்கும் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும்.
  • “ ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன.
  • மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும்.
  • இரண்டு, மூன்று நாட்களில் வெளிவரும் கால இல்லாத வெண்மைநிற புழுக்கள் திசுக்களை சாப்பிடும். இந்த தாக்குதல் பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும்.
  • தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும்.  எனவே தாக்குதலுக்குள்ளான முருங்கைக்காய் பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்து விடும்.
  • காய்களில் பிளவுகள், துரநாற்றம் வீசும்.  7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும்.
  • கூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியை தொடங்கும்.
கட்டுப்படுத்தும் வழி முறைகள்
  • பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேகரித்து மண்ணில் புதைத்தோ, அல்லது நன்கு தீயிட்டு எரித்து விட வேண்டும்.
  • மண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து காய விட வேண்டும்.
  • காய்களின் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க 3 சதவீத வேப்ப எண்ணை கரைசல் தெளிப்பு செய்ய வேண்டும்.
  • முருங்கை பூக்கும் தருணம், மாலத்யான் 2 மில்லி மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பிஞ்சு வளர ஆரம்பித்த 20 முதல் 30 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவு பென்தியான் அல்லது ஒரு லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பின்னர் 15 நாட்கள் இடைவெளி கழித்து டைகுளோர்வாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • மருந்து தெளித்த ஒரு வார காலத்திற்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது.  ஏனெனில் பூச்சி மருந்தின் எஞ்சிய நஞ்சின் வீரியம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.
தகவல் மூலம் : தினத்தந்தி 7.7.2011 வேளாண்மைச்செய்திகள்
நன்றி: ஜாம்ஷெட்ஜி டாடா தேசிய நிறுவனம் (Jamshedji Tata National Virtual Academy)

முருங்கையை தாக்கும் பூச்சிகள் கட்டுபடுத்துவது எப்படி

செடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாம் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும்.
  • “ ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன.
  • மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும்.
  • இரண்டு, மூன்று நாட்களில் வெளிவரும் கால இல்லாத வெண்மைநிற புழுக்கள் திசுக்களை சாப்பிடும். இந்த தாக்குதல் பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும்.
  • தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும்.  எனவே தாக்குதலுக்குள்ளான முருங்கைக்காய் பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்து விடும். காய்களில் பிளவுகள், துரநாற்றம் வீசும்.
  • 7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும். கூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியை தொடங்கும்.
கட்டுப்படுத்தும் வழி முறைகள்
  • பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேகரித்து மண்ணில் புதைத்தோ, அல்லது நன்கு தீயிட்டு எரித்து விட வேண்டும்.
  • மண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து காய விட வேண்டும்.
  • காய்களின் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க 3 சதவீத வேப்ப எண்ணை கரைசல் தெளிப்பு செய்ய வேண்டும்.
  • முருங்கை பூக்கும் தருணம், மாலத்யான் 2 மில்லி மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பிஞ்சு வளர ஆரம்பித்த 20 முதல் 30 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவு பென்தியான் அல்லது ஒரு லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பின்னர் 15 நாட்கள் இடைவெளி கழித்து டைகுளோர்வாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • மருந்து தெளித்த ஒரு வார காலத்திற்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது.  ஏனெனில் பூச்சி மருந்தின் எஞ்சிய நஞ்சின் வீரியம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.

தகவல் மூலம் : தினத்தந்தி 7.7.2011 வேளாண்மைச்செய்திகள்
தகவல் தொகுப்பு:Cas.பிரிட்டோ, கிராம வள மையம், செம்பட்டி
நன்றி: Jamshedji Tata National Virtual Academy

விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்துவருகிறார்.

  • இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதி சயங்கள் எதுவும் மாறாமல் காக்கப் படுகிறது. இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை.
  • இப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கை கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய்குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது.
  • இத்தகு முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6-7 மாதத்திலேயே காய்த்து பலன் தரத்தொடங்கிவிடுகிறது. காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்துவிடுகிறது.
  • இரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம் 200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம்.
  • சரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.
  • ஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக கவாத்து செய்தபின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையை பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம். (100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்தவாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்).
  • இவ்வாறு கவாத்து செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டுவைக்க வேண்டும்.
  • இப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆறாம் மாதத்தில் பூக்கத் தொடங்கும்.
  • மீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் கிடைக்கும்.
  • அறுவடை முடிந்தபின் செடிகளை அடியுடன் அப்புறப்படுத்திவிட்டு மறுநடவு செய்யலாம்.
  • மொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும்.
  • ஒவ்வொரு முறை கவாத்து செய்தபிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • இச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500-300 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
தொடர்புக்கு:கே.பி.எம்.சடையாண்டி,09791374087, 09865078101.
நன்றி: தினமலர்