சனி, 25 அக்டோபர், 2014

வாரன் பஃவட் எதிர்பார்க்கும் மூன்று குணங்கள்

வாரன் பஃவட் எதிர்பார்க்கும் மூன்று குணங்கள்

மாணவர்கள் அடிக்கடி வாரன் பஃவட் அவர்களைச் சென்று சந்திப்பார்கள். அப்படிச் சந்திக்க வரும் மாணவர்களிடம், அவர் விளையாட்டுப் போல் பல விஷயங்களைச் சொல்வார்.
அவர் ஒவ்வொரு மாணவனையும் ஒரு சக மாணவனைத் தேர்வு செய்யச் சொல்வார். ‘ஏதோ ஒரு மாணவனை அல்ல. நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்களின் 10% சம்பளம் உங்களது வாழ்நாள் பூராவும் கிடைக்கும் தகுதி உள்ள சக பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்யவேண்டும். அப்படி என்றால், எந்த மாணவனை நீங்கள் தேர்வு செய்வீர்கள்? ஏன்?’

மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவர் மேலும் கேள்விகளைக் கேட்பார்: “அதிக மதி நுட்ப எண் உள்ள ஒரு நபரையா? அல்லது ஒரு கால் பந்தை வெகு தூரம் வீசும் திறமை வாய்ந்த ஒரு நபரையா? அல்லது அதிக மதிப்பெண்கள் வாங்கும் ஒரு நபரையா? - நீங்கள் யாரைத் தேர்வு செய்யப் போகிறீர்கள்? தேர்வு செய்ய அவரகளின் எந்த குணங்கள் காரணமாக இருந்தன?”
பிறகு வேறு விஷயங்களுக்கு சம்பாஷனையை மாற்றுவார்.
‘யார் பொதுவாக வெற்றி அடைய மாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?’ என்ற கேள்வியை எழுப்புவார்.
மாணவர்களின் பதிலுக்குக் காத்திராமல், அவர்களை காகிதங்களை எடுக்கச் சொல்வார். அதில் நேர்மறைக் குணங்களை இடது பக்கத்திலும், எதிர்மறைக் குணங்களை வலது பக்கத்திலும் பட்டியல் இடச் செய்வார்.
“உண்மையில், மிகவும் பயன்படும் குணங்களுக்கும் அறிவின் அளவு கோள்கள், அதிக மதிப்பெண்கள் அல்லது குடும்ப உறவுகள் ஆகியவைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. மக்களின் தேர்வு ஒருவரின் பெருந்தன்மை, அன்பு, நேர்மை ஆகியவைகளின் அடிப்படையிலேயே அமையும்” என்று அவர் விளக்குவார்.
பிறகு மாணவர்களைப் பார்த்து அவர் கேட்பார்: “எந்த குணங்கள் அவர்களால் பெற முடியாது? எந்த குணங்கள் பெறாமல் அவர்களால் இருக்க முடியாது?”
இதற்கெல்லாம் பஃவட் சொன்ன பதில்களை மிச்சேல் ஐன்ஸ்னர் (Michael Eisner in his book - Working Together: Why Great Partnerships Succeed) தமது நூலில் விளக்கி உள்ளார்.
பஃவ்ட்டின் கருத்துக்கள் இதுதான்:
“இந்த குணங்கள் எல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்டவைகளாகும். மக்கள் தான் தாங்கள் தயாள குணமாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கிறார்கள். செய்யாத காரியங்களுக்கு உரிமை கொண்டாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும், வாழ்வின் முன்னேற்றப் புள்ளிகளை இன்னும் அதிகரிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும், பொறாமைப் பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
“இறுதியில், இவைகள் எல்லாம் மிகவும் எளிதான ஒன்று என்பதை அறிவீர்கள். இடது புறப் பட்டியல் குணங்களை மேம்படுத்துவதில் ஆரம்பித்து, வலது புறப் பட்டியல் குணங்களைச் செய்வதை நிறுத்துவது வரை முயல வேண்டும்.
“நீங்கள் பொதுவாக மூன்று குணங்களை ஒரு நபரிடம் காண விழைகிறீர்கள்.
அந்த மூன்று குணங்கள்: அறிவு, ஆற்றல், நேர்மை.
இவைகளில் கடைசியாக உள்ள நேர்மை ஒருவரிடம் இல்லாவிடில், மற்ற இரண்டு குணங்கள் இருந்தாலும், அதனால் எந்தவிதமான நன்மையும் இல்லை. ஒவ்வொருவரிடமும் அறிவும், ஆற்றலும் இருக்கின்றன. அப்படி இல்லாவிட்டால், நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்க முடியாது. ஆனால், நேர்மை என்பது நீங்கள் தீர்மானிக்க வேண்டியதாகும். அந்த குணத்துடன் நீங்கள் பிறக்க வில்லை. அந்தக் குணத்தைப் பள்ளியிலும் நீங்கள் கற்க முடியாது.”
பஃவட் ரொம்பவும் அதிர்ஷசாலி. அவர் அந்த மூன்று குணங்களையும் மேம்படுத்த மிகவும் பாடுபட்டவர். அந்த மூன்று குணங்களில், நேர்மையை அவர் தேர்வு செய்தார்.
மேலும் பஃவட் சொல்வார்:
“நம்பிக்கைத் துரோகம், கருமித்தனம், ஈகை இன்மை, அகம்பாவம் ஆகிய குணங்கள் அனைத்தும் மற்றவர்களிடம் இருப்பதை நீங்கள் விரும்பாவிடினும், இந்தக் குணங்களைக் கொண்டு இருக்க நீங்கள் முடிவு செய்கிறீர்கள். இவைகள் எல்லாம் நீங்கள் தேர்வு செய்தவைகளே. புகழ் என்ற பானை சிறியதாக குறைவானவற்றைக் கொண்டு உங்களைச் சுற்றி வருகிறது என்றும், மற்றவர்கள் அந்தப் பானையிலிருந்து எதையாவது ஒன்றை எடுத்து விட்டால், உங்களுக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது என்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நடப்பது அதற்கு நேர்மாறக இருக்கும்.”
(ஷானி பாரிஷ் (Shane Parrish) கட்டுரையைத் தழுவி எழுதியது.)
அனுப்பு: ஸ்ரீமதி.வத்சலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக